'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் |
1940களில் டி ஆர் ராஜகுமாரி உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக வந்தவர் வசுந்தரா தேவி. அழகு, பாடும் திறமை, நடிப்பு திறமை, நடனத் திறமை அனைத்துமே அவரிடம் இருந்தது. அந்த காலத்தில் துணிச்சலான நடிகை என்ற பெயர் பெற்றவர். அதற்கு ஒரு உதாரணம் அவர் ஒரு தயாரிப்பாளர் மீது தொடர்ந்த வழக்கு.
வசுந்தரா தேவி தனது மூன்றாவது படத்தில் நடிக்க தொடங்கினார். இதற்காக தயாரிப்பாளர் உடன் ஒப்பந்தமும் செய்திருந்தார். பாடி நடிக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் ஒரு விதி. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த படத்தில் இருந்து வசுந்தரா தேவி நீக்கப்பட்டார். வசுந்தரா தேவியின் குரல் சரியில்லை அதனால் அவர் பாடிய பாடல்களும் சரி இல்லை என்று அப்போது தயாரிப்பாளர் காரணம் என சொன்னார்.
படத்தில் இருந்து நீக்கப்பட்டது கூட வசுந்தராதேவிக்கு கவலை இல்லை, ஆனால் உன் குரல் சரியில்லை என்பது தான் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே ஒரு முடிவெடுத்தார். அந்தப் படத்தில் இவர் பாட வேண்டிய பாடல்கள் அனைத்தையும் தனியாக தனது சொந்த செலவில் ஒரு ஸ்டூடியோவில் பாடி பதிவு செய்தார். அதைக்கொண்டு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தார். எனது குரல் அழகாகவும் இனிமையாகவும் இருக்கும்போது அது சரி இல்லை என்று அதே காரணமாக என்னை நீக்கியது செல்லாது என்று அவர் நீதிமன்றத்தில் வாதம் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'வசுந்தரா தேவியின் குரல் நன்றாக இருக்கிறது. அதை காரணம் காட்டி அவரை நீக்கியது செல்லாது' என்று தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் படத்தில் தொடர்ந்து நடிக்குமாறு வசுந்தரா தேவியை கேட்டுக்கொண்டார். ஆனால் வசுந்தரா தேவி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் நடிக்க மறுத்து அடுத்த மாதம் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்கள் தான் ஆல் இன் ஆல். அவர்கள் வைத்தது தான் சட்டம். முன்னணி நடிகர் நடிகைகள் கூட தயாரிப்பாளர் வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். அப்படியான காலத்தில் ஒரு தயாரிப்பாளரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற வசுந்தரா தேவியின் செயல் இன்றளவும் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் ஆளுமை செய்த வைஜெயந்தி மாலாவின் தாய் தான் இந்த வசுந்தரா தேவி.