ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தளபதி நடிகரின் கடைசி படத்தில், அவருடன் ஏற்கனவே மூன்று எழுத்து படத்தில் நடித்த, மும்பை நடிகை இணைந்திருக்கும் நிலையில், இன்னொரு கேரளத்து நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், கேரளத்து அம்மணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டார், படத்தின் இயக்குனர். இதையடுத்து, செம கடுப்பான மும்பை நடிகை, 'படத்தில் எனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னை, 'ஹீரோயின்' ஆக, 'புக்' பண்ணி விட்டு, அந்த கேரளத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு பறந்து விடுவேன்...' என்று இயக்குனரை மிரட்டி வருகிறார். இதனால், அவர்களின் இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி நடிகரின் கவனத்துக்கு போயிருக்கிறது.