பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய அவர் மீண்டும் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அண்மையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து சீக்கிரமே சீரியல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.