தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய அவர் மீண்டும் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அண்மையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து சீக்கிரமே சீரியல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.