பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் புத்தகத்தை வைத்தபடி போஸ் கொடுக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர்கள் திருமணம் செய்து செய்து கொண்டு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல தயாராகி விட்டது போன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது ஜெய்யும், பிரக்யாவும் இணைந்து பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு பப்ளிசிட்டி தேடும் முயற்சியாக இப்படி ஒரு புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.