ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் |
பகவதி, சென்னை 28, சுப்பிரமணியபுரம், சரோஜா, எங்கேயும் எப்போதும் என பல படங்களில் நடித்தவர் ஜெய். தற்போது கருப்பர் நகரம், பேபி அண்ட் பேபி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய சோசியல் மீடியாவில் நடிகை பிரக்யா நக்ராவுடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஜெய், புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுள் ஆசீர்வாதத்துடன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பிரக்யா நக்ரா தனது கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்க, ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் புத்தகத்தை வைத்தபடி போஸ் கொடுக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது அவர்கள் திருமணம் செய்து செய்து கொண்டு வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்ல தயாராகி விட்டது போன்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது ஜெய்யும், பிரக்யாவும் இணைந்து பேபி அண்ட் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படப்பிடிப்பு தளத்தில்தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு பப்ளிசிட்டி தேடும் முயற்சியாக இப்படி ஒரு புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.