'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். வயதுமூப்பு காரணமாக அவரது உயிர் மாலை 6.40 மணியளவில் பிரிந்தது. "வாழ வைத்த தெய்வம்" என்ற படம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமான இவர், சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் - தங்கை பாசத்தை கொண்டாடப்படும் படமான ‛பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள, ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். 'பெண் என்றால் பெண்' என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இயக்குநர் ஏசி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு, நகமும் சதையும் போன்றது. இவர்களது கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகின.
சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.
சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.




