ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ராஜசேகர். இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா 2022 போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
தமிழில் 'அன்பறிவு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மூன்றாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் ஷிவானி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால் அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது.
விலகலுக்கான காரணம் குறித்து ஷிவானி, “எனது மருத்துவப் படிப்பின் எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலேரியாவால் நான் பாதிக்கப்பட்ட காரணத்தால் பெரும்பாலான அழகுப் போட்டிக்கான பயிற்சிகளை என்னால் சரிவர செய்ய முடியவில்லை. மீண்டும் நலம் பெற்றுத் திரும்பி வருவேன். எனக்கேற்றபடி எதுவும் நடக்கவில்லை. எனது பிராக்டிக்கல் தேர்வுகள் திடீரென ஜுலை 3ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது,” என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான அழகுப் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் ஷிவானி மேலும் தெரிவித்துள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் ஷிவானி தமிழ்நாடு சார்பாகத்தான் இந்த அழகுப் போட்டியில் கலந்து கொள்ள இருந்தார். தற்போது அவர் போகாத காரணத்தால் இந்த வருடம் தமிழ்நாடு சார்பில் யாரும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.