தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டைப் போல 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதாவது பிரபலங்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய நிமிடம் முதல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பவர்களை 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் என்றழைப்பார்கள்.
இப்படியான பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசி டயானா விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்று சொல்வார்கள்.
பாலிவுட்டில் இப்போதும் நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து ஷாப்பிங் சென்றால், ஜிம்முக்குச் சென்றால், படப்பிடிப்புக்குச் சென்றால், நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அவர்கள் பின்னால் சென்று பல பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டு படமெடுப்பார்கள். அவர்களுக்காக நடிகைகளும் சில நிமிடங்கள் ஒதுக்கி போஸ் கொடுப்பார்கள்.
அப்படி சில கலைஞர்கள் நடிகை ராஷ்மிகாவை புகைப்படம் எடுத்த போது, “இந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்,” என அப்பாவியாக சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார். அந்தப் புகைப்படங்கள் பல இணையதளங்களில் வெளிவருவதை ராஷ்மிகா இதுவரை பார்த்திருக்க மாட்டாரோ ?.