காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பாலிவுட்டிலும், ஹாலிவுட்டைப் போல 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அதாவது பிரபலங்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியேறிய நிமிடம் முதல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பவர்களை 'பப்பராஸி' புகைப்படக் கலைஞர்கள் என்றழைப்பார்கள்.
இப்படியான பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் துரத்தியதால் தான் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசி டயானா விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்று சொல்வார்கள்.
பாலிவுட்டில் இப்போதும் நடிகைகள் வீட்டை விட்டு வெளியில் வந்து ஷாப்பிங் சென்றால், ஜிம்முக்குச் சென்றால், படப்பிடிப்புக்குச் சென்றால், நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அவர்கள் பின்னால் சென்று பல பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள் போட்டி போட்டு படமெடுப்பார்கள். அவர்களுக்காக நடிகைகளும் சில நிமிடங்கள் ஒதுக்கி போஸ் கொடுப்பார்கள்.
அப்படி சில கலைஞர்கள் நடிகை ராஷ்மிகாவை புகைப்படம் எடுத்த போது, “இந்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்,” என அப்பாவியாக சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டார். அந்தப் புகைப்படங்கள் பல இணையதளங்களில் வெளிவருவதை ராஷ்மிகா இதுவரை பார்த்திருக்க மாட்டாரோ ?.