விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(78) உடல்நலக்குறைவால் காலமானார். அண்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று(டிச., 26) மாலை மாரடைப்பால் காலமானார். 800க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள இவர், திருடா திருடி, திமிரு, பேரழகன், சந்தோஷ் சுப்ரமணியம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மயிலாடுதுறையை சேர்ந்த மாணிக்க விநாயகம், பிரபல நடன ஆசிரியர் வழுவூர் ராராமையாவின் இளைய மகனாவார். 1948ம் ஆண்டு டிச., 10ல் பிறந்த இவர் இளம் வயது முதலே நன்றாக பாடக் கூடியர். கனீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் கண்ணுக்குல கெழுத்தி.... என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து ஏலே இமயமலை... (தவசி), தேரடி வீதியில தேவதை வந்தா... (ரன்), பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே... (உன்னை நினைத்து), விடை கொடு  எங்கள் நாடே.... (கன்னத்தில் முத்தமிட்டால்), கொடுவா மீச அறுவா பார்வை.... (தூள்), சின்ன வீடா வரட்டுமா... (ஒற்றன்), கொக்கு பற பற... (சந்திரமுகி), கட்டு கட்டு கீரை கட்டு... (திருப்பாச்சி) உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். 
|  | 
 
           
             
           
             
           
             
           
            