பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் இளம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன் ஜோடியாக 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற 'ஸ்ரீவள்ளி', 'சாமி சாமி' பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதும் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் படப்பிடிப்பின் லஞ்ச் இடைவெளியில் சுவாரசியமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா. அதில் கை விரல்கள் பகுதி மட்டும் அவரது வழக்கமான உடல் நிறத்தில் இருக்க, கையின் மற்ற பகுதி கருப்பு நிறத்தில் இருக்கிறது.
படத்தில் மேக்கப் மூலம் அவரை கருப்பான பெண்ணாக மாற்றியிருக்கிறார்கள். மேக்கப் மூலம் எப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க ராஷ்மிகா இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
செம்மரக் கடத்தல் பற்றிய படம் என்பதால் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் தமிழர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்களா என்ற சந்தேகம் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட போதே எழுந்தது. படம் வெளிவரும் சமயம் ஏதாவது சர்ச்சைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.