மனைவி கொடுத்த புகார் : தலைமறைவான சீரியல் நடிகருக்கு ஜாமின்
Advertisement
Advertisement
மனைவி கொடுத்த புகார் : தலைமறைவான சீரியல் நடிகருக்கு ஜாமின்
ஜன 12, 2024
அ நிறம் | அளவு
Advertisement
தமிழ் சின்னத்திரைக்கு நந்தினி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவி, கண்ணானே கண்ணே என்கிற ஹிட் தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 ஆம் ஆண்டு காதலி லெட்சுமி நாயரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே பிரிந்தார். இந்நிலையில், லெட்சுமி நாயர் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பில் ராகுல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து ராகுல் ரவி தலைமறைவானார். மேலும், இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் ராகுல் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன் ஜாமின் வழங்கியுள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!