
சாமி இல்லேன்னா நான் கோமா தான் : மனம் திறக்கும் வில்லி நடிகை
அதில் ஸ்வாதி, "நான் நடிக்க வருவதற்கு முன் படித்து முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா ஸ்டேஜூக்கு சென்றுவிட்டேன். என் பெற்றோர் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டு விபூதி வைத்தனர். அதன்பிறகுதான் எனக்கு உடல்நலம் சரியானது. ஷீரடி சாய் பாபா எனக்கு புதுவாழ்க்கையை கொடுத்தார்" என்று கூறியுள்ளார். மேலும், ஸ்வாதி பெங்களூரை சேர்ந்தவர் என்றாலும், சீரியலில் நடிப்பதற்காக சென்னை வருவதற்கு முன்பே மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டு 5 வருடங்கள் வந்துள்ளாராம். இப்போது அவர் வீட்டில் 20 சாய் பாபா சிலைகள் இருக்க, தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு அவர்கள் வாழ்வில் கடவுளின் நல்லாசி கிடைக்க வேண்டுமென பாபா சிலைகளை பரிசாக கொடுத்து வருகிறாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!