
சின்னத்திரையில் இருந்து விலகுகிறார் சுபிக்ஷா: சினிமாவில் கவனம் செலுத்த முடிவு
மார் 23, 2026
Advertisement
சின்னத்திரை நடிகை சுபிக்ஷா தற்போது "வீரா" என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் "பேமிலி படம்" என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. அதில் சுபிக்ஷாவின் நடிப்பும் பேசப்பட்டது. அடுத்த வாய்ப்புகள் அமையாததால் தற்போதும் அவர் "வீரா" தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால் விரைவில் "வீரா" தொடரில் சுபிக்ஷாவின் கேரக்டர் முடியப்போகிறது என்றும் அவராகவே விலகி கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுபிக்ஷா கூறியிருப்பதாவது:
வீரா தொடரில் திட்டமிட்டபடி எனது கேரக்டர் முடிவிற்கு வருகிறது. நான் விரும்பினால் கேரக்டரை நீட்டிப்பதாக சொன்னார்கள் வேண்டாம் என்று கூறிவிட்டேன். தயாரிப்பு தரப்பு, சேனல் தரப்பு இரண்டிடமும் சுமுகமாக பேசி மகிழ்ச்சியாக விலகுகிறேன். காரணம் இப்போது எனக்கு சினிமா, வெப் தொடர் வாய்ப்புகள் அதிகம் வருகிறது. அதோடு நான் யோகி பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் விரைவில் வெளிவருகிறது. அந்த படம் எனக்கு ஒரு திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!