
சீரியலை நிறுத்த சொன்ன நெட்டிசனனுக்கு ஸ்ரீகுமார் நச் பதில்!
ஆக 19, 2023
Advertisement
பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராமில், "டப்பிங் தான் முக்கியம். உங்கள் நடிப்பு உங்களுடைய குரலில்லாமல் முழுமை அடையாது" என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒருவர் "தயவுசெய்து இந்த சீரியலை முடிச்சிடுங்க. முடியல" என கிண்டலாக கமெண்ட் செய்தார்.
இதற்கு ஸ்ரீகுமார், "ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்" என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.
இதற்கு ஸ்ரீகுமார், "ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்" என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!