
விவாத நிகழ்ச்சி நடத்தும் சேரன்
இதுகுறித்து சேரன் கூறும்போது “முதல் முறையாக சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன். நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில், குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு. தீர்வோடு இருப்பவர்களுக்கு இது தெளிவு.
நான் சரி எனில் நீ தவறா... இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை.... பேசாமலே இருந்தா அதுவே மக்களுக்கு புரிஞ்சுடும்னு நினைக்கிறது சரியா. இல்லை நான் மக்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன்னு அட்வைஸ் வரைக்கும் போறது தவறா? எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம் இருக்கு இல்லை பல பக்கங்கள் இருக்கு.
இது உங்களுக்கான மேடை. உங்களின் பார்வையை பேசுங்கள். உங்களுக்கான தெளிவை எடுத்துச் செல்லுங்கள். நான் கூப்பிடுவது மக்களை அவர்களோடு பேச அவர்களை பேச வைக்க வாங்க பேசலாம்” என்கிறார் சேரன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!