
திருமணத்திற்கு பின் கார் வாங்கிய சித்து - ஸ்ரேயா ஜோடி
பிப் 28, 2022
Advertisement
சின்னத்திரை ஜோடிகளில் அதிக ரசிகர்களை கொண்ட ஜோடி என்றால் அது சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான். சீரியலில் மட்டும் அல்ல நிஜத்திலுமே இருவருக்குமிடையேயான புரிதலும், காதலும் கவித்துவமானது. அதற்காகவே இவர்களை அதிக நபர்கள் சோஷியல் மீடியாக்களில் பின் தொடர்ந்து வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் கணவனும், மனைவியும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்கள். எனினும், இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என ரசிகர்களும் ஒருபுறம் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
சித்து - ஸ்ரேயா தம்பதியினர் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் சோஷியல் மீடியா மற்றும் யூ-டியூப் சேனல் வழியே பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சித்து - ஸ்ரேயா ஜோடி தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளனர். அதை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
சித்து - ஸ்ரேயா தம்பதியினர் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் சோஷியல் மீடியா மற்றும் யூ-டியூப் சேனல் வழியே பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சித்து - ஸ்ரேயா ஜோடி தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளனர். அதை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!