
5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நந்தினி நித்யா ராம்
நந்தினி தொடர் 2018-ல் முடிவடைந்த பிறகு நித்யா ராம் தமிழில் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. இதனால் வாடிப்போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நித்யா ராம் ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதிதாக உருவாகி வரும் அண்ணா என்கிற தொடரில் நித்யா ராம் ஹீரோயினாக நடிக்க, அவருக்கு ஜோடியாக "சரவணன் மீனாட்சி" செந்தில் நடிக்கிறார். மேலும், குக் வித் கோமாளி, பாக்கியலெட்சுமி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ரித்திகா தமிழ்செல்வியும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நித்யா ராம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரியாவதை ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!