
அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர்
ஜூன் 07, 202610
Advertisement
தளபதி நடிகர் சி.எம்., ஆகிவிட்டதால், உச்ச நடிகர் பெரிய அளவில், "பீல்" பண்ண துவங்கி விட்டார். காரணம், இவர் அரசியல் கட்சி துவங்கி களமிறங்க தயாரானபோது, "முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் நடக்காத காரியம். தேர்தலில் தோல்வியடைந்து அசிங்கப்பட்டு விடாதீர்கள்..." என்று சிலர் அவரை பயமுறுத்தி விட்டனர். அதனால்தான் கடைசி நேரத்தில் அரசியலுக்கு வராமல் அவர் பின்வாங்கி விட்டார்.
தற்போது, முதல் தேர்தலிலேயே தளபதி நடிகர், சி.எம்., ஆகிவிட்டதை அடுத்து, தனக்கு தடை போட்ட சில திரையுலக நண்பர்களை தொடர்பு கொண்டு, "என்னை பயமுறுத்தி நான் முதலமைச்சராவதையே தடுத்து நிறுத்தி விட்டீர்களே. இனிமேல் வாழ்க்கையில் எந்த நண்பர்களின், "அட்வைஸை"யும் நான் கேட்கப்போவதில்லை..." என்று கோபத்தை வெளிப்படுத்தி கொந்தளித்துள்ளார், உச்ச நடிகர்.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள் (10)
கருத்து எழுதுங்கள்அரசியலில் வயசுக்கு வருவது என்பதே வயதாவதுதான்
his urge and uncontrollable desire to earn money money and money is unsatiaring and thats why he always prostrates before DMKs anti social eco tem - he will come to politics and he is a COWARD
தினமலருக்கு ரஜினி மேல் அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. இல்லாத வதந்திகளை கிளப்பி எல்லாரையும் வசை பாட வைக்கிறீர்கள். தேர்தலுக்குப்பின் இது நாலாவது முறை. கேவலமான வார்த்தைகளால் வசைபாட விட்டுவிட்டு பதிலடி கொடுத்தால் பதிவிடுவதில்லை?
இன்னுமா இவரோட செய்தியெல்லாம் மீடியாவில போட்டுக்கிட்டிருக்கீங்க.
Shyamnats, உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காக எல்லாம் ரஜினியை விட்டுற மாட்டாங்க. இதைத் தான் பூனை கண்ணை மூடுனா உலகம் இருண்டதில்லை என்று சொல்வாங்க. நல்லதோ கெட்டதோ மீடியாவுக்கு பரபரப்பான செய்திகளுக்கு ரஜினி தேவை. அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் புகழ் மங்கப்போவதில்லை.
my guess is, mr.rajinikanth.
தாத்தா போய் பேரப்பிள்ளைங்களோட உட்கார்ந்து கலகலகலனு விளையாடிட்டு இரு. காலம் போன வயசுல அரசியல் எல்லாம் உங்களுக்கு சரிபட்டு வராது... வேணும்னா ஒரு இயக்குனர் கிட்ட அரசியல் சார்ந்த ஒரு கதை எழுத சொல்லி படத்தில் வேண்டுமானால் முதலமைச்சரா நடிச்சு மனச தேத்திக்கலாம்.. நிஜத்தில் இனி முடியாது.
இப்போது ஆதவ் கட்டுப்பாட்டில் ஜோசஃப் நடத்தும் கேவலமான ஆட்சியைப் பார்த்து ரஜினி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.
இனி வயசுக்கு வந்தா என்ன வரலன்னா என்ன.. காலம் போன வயசுல காலம் பதில் சொல்லி விட்டது..
யாராக இருக்கும்? தினமலர் ரொம்ப கஷ்டமா இருக்கு கண்டுபிடிக்க.. ஒரு clue கொடுங்கள்.
சரி விடுங்க உச்சா ஸாரி உச்ச நடிகர். அதுதான் பள்ளி கட்டிடத்துக்கு வாடகை கொடுக்காத, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காத, வாங்கிய கடனுக்கு போலி செக் கொடுத்த நேர்மையான, புரட்சிகரமான அம்மணி இயக்கம் ஆரம்பித்து விட்டார்களே. 2027 ஆம் ஆண்டில் நீங்கள் முதல்வர், மேடம் இணை முதல்வர், நம்ம மலை துணை முதல்வர். இப்படியே நினைத்துக் கொண்டு தூங்கப்போங்கள்.
அட, நம்ம சிங்கப்பூர் மணி ஒரு தற்குறியா? சொல்லவேயில்ல? சங்கீதா மேடமை எல்லாம் ரொம்ப கேவலமா திட்டி பதிவு போடாதீங்க. என்ன இருந்தாலும் ஒருகாலத்தில் மனைவியில்லையா?
புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதைதான், விஜய்யை மக்கள் ஏற்றுக்கொள்ள காரணம் அவர் செல்வாக்கு மற்றும் தன் சினிமா வேலையை (200 கோடி) விட்டு வருகிறேன் என்றதுதான், ஆனால் நீங்க கடைசி காலத்தில் இப்போ வருவது (2020 முதல்)ஏற்றுக்கொள்ள முடியாது. CM ஆவரது அவ்வளவு ஈசியும் இல்ல, இங்க எல்லாரும் விஜய்யா ஆக முடியாது
குமார், தயவு செய்து புலியை அசிங்கப்படுத்த வேண்டாம். வேண்டுமென்றால் கழுதைப்புலி என்று சொல்லிக் கொள்ளுங்கள். அது தான் பிற விலங்குகள் வேட்டையாடியதை திருடி உண்ணும், இப்போது இவர் அரசியல் செய்வது போல. தவிர சினிமாவிலும் அரசியலிலும் வெற்றி பெற ஜோசஃப் கையாண்ட தரமற்ற உத்திகளையும் தில்லாலங்கடி வேலைகளையும் ரஜினியால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தான் அரசியலுக்கு வராததற்கான காரணங்களை ரஜினி பலமுறை சொல்லிபோதம், இல்லாத கதைகளை சொல்லி வம்பிழுப்பது சமீபகாலத்தில் வாடிக்கையாகிவிட்டது. அப்படி வதந்தி கிளப்புபவர்கள் உண்மையான பவர் சென்டரான ஆதவ் விஷயத்தில் மட்டும் மௌனமாக இருப்பது ஏன் எனறு தெரியவில்லை.