
அனிதா சம்பத்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி
ஜூலை 15, 2023
Advertisement
சின்னத்திரை செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செலிபிரேட்டியாக மாறிவிட்டார். தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அவர், சொந்தமாக யூ-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், அனிதா சம்பத் தனக்கு கையில் ட்ரிப்ஸ் போட்டிருக்கும் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் அனிதா சம்பத்தின் பதிவை தனது பக்கத்திலும் பகிர்ந்துள்ள அவரது கணவர், "எல்லாம் சில நாளில் சரியாகிவிடும் பப்பு" என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.
அவரும் அனிதாவுக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. எனவே அனிதாவுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டு ரசிகர்கள் சோகத்தில் புலம்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அனிதா தனது அடுத்த பதிவில், "எனக்கும் பிரபாவுக்கும் ஒன்றுமில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். சில நாட்கள் கழித்து விளக்கமளிக்கிறேன். இப்போது எங்களுக்கு தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனிதா விரைவிலேயே பூரண குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.
அவரும் அனிதாவுக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. எனவே அனிதாவுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டு ரசிகர்கள் சோகத்தில் புலம்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அனிதா தனது அடுத்த பதிவில், "எனக்கும் பிரபாவுக்கும் ஒன்றுமில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். சில நாட்கள் கழித்து விளக்கமளிக்கிறேன். இப்போது எங்களுக்கு தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனிதா விரைவிலேயே பூரண குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!