இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பின் "எதிர்நீச்சல்" தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளார். கதையின் நேர்த்தி, காட்சி வடிவமைப்பு, வசனம் என அனைத்திலும் டாப் மதிப்பெண்களை ஸ்கோர் செய்து வரும் "எதிர்நீச்சல்" தொடர் இளைஞர் முதல் முதியவர் வரை ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பிடித்த தொடராய் மாறியுள்ளது. அதிலும், அதகளமான எபிசோடுகளால் சமீப காலங்களில் டாப் டிஆர்பியை பிடித்து வருகிறது. இத்தகைய வெற்றியை பெற்றுள்ள இந்த தொடர் பிற மொழி சேனல்களில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கில் "உப்பென்னா", மலையாளத்தில் "கனல் பூவு", கன்னடத்தில் "ஜனனி", பெங்காலியில் "அலோர் தீக்கனா", மராத்தியில் "சபாஷ் சன்னை" ஆகிய பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக தமிழ் தொடர்களில் "கயல்", "சுந்தரி" உள்ளிட்ட சில தொடர்களும் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்நீச்சல் தொடர் மட்டுமே 5 மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!