
சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட்
செப் 28, 2024
Advertisement
சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட நல்ல மவுசு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியலையே சினிமாவை போல் 2:30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குழுவினர் இறங்கியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடந்து 2:30 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவது போலவே இரண்டரை மணி நேரத்தில் காதல், வில்லன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் அடக்கி இதற்கென ஸ்பெஷலாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!