
விருதுகளை விற்று வாழ்ந்த நடிகைக்கு உதவிய சிரஞ்சீவி
தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி இவர் அவதிப்பட்டார். தற்போது அவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் இறந்து விட்டார். ஒரே மகளும் நோய்வாய்பட்டுள்ளார். இதனால் தான் வறுமையில் வாடுவதாகவும், மருந்து வாங்ககூட பணம் இன்றி தான் பெற்ற விருதுகளை விற்று மருந்து வாங்கி வருவதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த தகவலை கேள்பிப்பட்ட சிரஞ்சீவி, பவள சியாமளாவிற்கு 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சிரஞ்சீவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!