
தேசியவிருது பெற்ற மரைக்கார் ; கடற்படைக்கு அர்ப்பணித்த மோகன்லால்
இந்தப்படத்தை மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் தான் தயாரித்துள்ளார். இந்தப்படத்திற்கு விருது கிடைத்ததை தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் சிலருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். மேலும் இந்த விருதை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மோகன்லால்.
அதற்கு காரணமும் உள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வீரதீர சாகச வரலாறாக இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த குஞ்சாலி மரைக்கார் கடல் அனுபவம் கொண்ட வீரர்களை ஒன்று திரட்டி, கடற்படையை உருவாக்கி, போர்த்துக்கீசியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். இந்த மரைக்கார் கதாபாத்திரத்தில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!