
தியேட்டரில் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் : சமாதானப்படுத்திய நடிகை
அதில் ஒரு ரசிகர் நேருக்கு நேராக இந்த படம் ரொம்பவே மோசம்.. எங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்த படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் இப்படி விஷயத்தை சொன்ன முறை தவறு. இது ஒரு மோசமான படம் என்று கூறியதும், அங்கே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நாயகி திவ்யா பிள்ளை இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, “படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. அதை நாம் தடுக்கக்கூடாது. எல்லோருமே படம் பற்றி பாசிடிவாக சொல்வார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கக் கூடாது” என்று கூறி அங்கே எழுந்த சலசலப்பை அமைதிப்படுத்தினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!