
பாதிக்கப்பட்ட நடிகைக்கு தான் ஆயுள் தண்டனை : நீதிமன்ற தீர்ப்பு குறித்து நடிகை பாக்கியலட்சுமி கருத்து
அந்த வகையில் இந்த பாதிக்கப்பட்ட நடிகையின் சார்பாக எப்போதுமே குரல் கொடுத்து வந்த மலையாள டப்பிங் கலைஞரும் நடிகையுமான பாக்கியலட்சுமி இந்த தீர்ப்பு குறித்து கூறும்போது, “குற்றவாளிகளுக்கு வெறும் 20 வருட சிறை தண்டனை தான். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை தான் ஆயுள் முழுவதும் மானசீகமான தண்டனையை அனுபவிக்க போகிறார். என்ன விதமான அநீதி இது ? எதை அர்த்தப்படுத்துகிறது ? குற்றவாளிகளின் வயது, அவர்கள் வாழ்க்கை, அவர்களது பெற்றோர் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அப்படியானால் பாதிக்கப்பட்டவருக்கு அம்மா இல்லையா ? வாழ்க்கை இல்லையா ? வயது இல்லையா ? இது அநீதி. ஏற்றுக்கொள்ளவே முடியாதது” என்று கூறியுள்ளார். அதேபோல நடிகை பார்வதியும் இந்த தீர்ப்பை விமர்சித்து பெண்கள் வாழ்வதற்கு என எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!