
திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை : ஸ்வேதா மேனன்
அதன்பிறகு கடந்த வருடம் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்திற்குள் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு எழுந்ததால் நடிகர் திலீப், நான் நடிகர் சங்கத்தில் இப்போது சேரப் போவதில்லை என்று கூறி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது நிரபராதி என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டதால் அவர் நடிகர் சங்கத்தில் இணைவாரா அல்லது இணைத்துக் கொள்ளப்படுவாரா என்கிற கேள்வி கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் தான் நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற்று முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு நடிகை சம்பந்தப்பட்ட பிரச்னையில் நடிகர் திலீப் சம்பந்தப்பட்டு தற்போது நீதிமன்றம் அவர் நிரபராதி என்று கூறிவிட்டாலும் கூட இன்னும் அவரை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது முடித்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்ட நடிகையின் இந்த வழக்கு குறித்து உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது என தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் சொல்வது அதற்கு சரியான நேரம் இது தான். அதேபோல நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது குறித்து இன்னும் எந்த விவாதங்களும் நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!