
கருத்து வேறுபாட்டால் பிரிந்த கதாசிரியரின் மகனை இயக்குனராக்கிய மம்முட்டி
எண்பதுகளில் துவங்கி பிரபலமான கதாசிரியராக வலம் வந்த கலூர் டென்னிஸ், மம்முட்டி மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோரின் பல படங்களுக்கு கதை எழுதியவர். குறிப்பாக தயாரிப்பாளர்களின் முடிவுகளில் ஹீரோக்களின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பவர் கலூர் டென்னிஸ். அதனாலேயே மம்முட்டி நடித்த இருபத்தி நான்கு படங்களுக்கு கதை எழுதிய இவர் ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடு காரணமாக 12 வருடங்கள் மம்முட்டியிடம் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் இந்த கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்துக்கொள்ளாத மம்முட்டி அவரது மகனை தனது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது ஆச்சரியமான ஒன்று. இதேபோல சில வருடங்களுக்கு முன்பு பிரபல கதாசிரியர் ரெஞ்சி பணிக்கரின் மகனான நிதின் ரெஞ்சி பணிக்கர் என்பவரையும் கசபா என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மம்முட்டி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!