
நடிகை வழக்கை விசாரிக்க காலநீட்டிப்பு வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கு சில வருடங்களாகவே மெதுவாக நகர்ந்து வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை மே 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே போலீசாருக்கு காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் திலீப் மொபைல்போனில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் சம்பந்தமாக இன்னும் சில சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும் அதற்கு இன்னும் சற்று கால அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!