
நடிகர் மம்முட்டியின் சொத்து விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த உத்தரவினை எதிர்த்து மம்முட்டியும் அவரது குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் . அந்த மனுவில், கடந்த 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை கழுவேலி புறம்போக்கு வகைப்படுத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த நிலம் சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மம்முட்டி தரப்பில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலும் நிலத்தை மறு வகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. அதை ஏற்று நீதிபதி அந்த நிலத்தை கழுவெலி புறம்போக்கு நிலமாக மறு வகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதோடு இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க பணி ஆணை பிறப்பித்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!