
பறை இசை வாசித்த நடிகை ரோஜா
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வரும் நடிகை ரோஜா, அவ்வப்போது தனது சொந்த தொகுதியான நகரி தொகுதியில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நகரி தொகுதியில் உள்ள பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
அப்போது பறை இசைக் கலைஞர்களின் இசையை அவர் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகை ரோஜா ஒரு கட்டத்தில் திடீரென்று எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த ஆண்டு இதேபோல் ரோஜா மாணவர்களுடன் கபடி விளையாடிய வீடியோ வைரலானது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!