
புஷ்பா-2வால் அல்லு அர்ஜுனுக்கு புதிய சிக்கல்
ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ புஷ்பாவின் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர முடித்துவிட்டு அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க செல்லட்டும் என நினைக்கிறாராம். காரணம் புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்து ரப் அன்ட் டப்பான ஆளாக மாறியுள்ளதோடு, உடல் எடையையும் கூட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
இன்னொரு படத்தில் நடித்துவிட்டு வந்தால் மீண்டும் கெட்டப் மாற்றி இரண்டாம் பாகத்தை முடிக்க தாமதமாகி விடும் என தயாரிப்பாளர் கருதுகிறாராம். இருந்தாலும் இதை அல்லு அர்ஜுனிடம் எப்படி சொல்வது என இயக்குனர் சுகுமார் தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!