
அஜித் படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்த அய்யப்பனும் கோஷியும் இயக்குனர்
அய்யப்பனும் கோஷியும் படம் வெளியான பின்பு, அதை பார்த்துவிட்டு சாச்சியை தொடர்பு கொண்ட அஜித், அவரை ரொம்பவே பாராட்டினாராம். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம், அதற்கான கதையை தயார் செய்யுங்கள் என்று சாச்சியிடம் கேட்டுக்கொண்டாராம் அஜித். தனுஷ்கோடியை மையப்படுத்திய கதை ஒன்றை, அஜித்தை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்க வேண்டும் என்பதை தனது கனவு படமாகவே நினைத்திருந்தாராம் சாச்சி. மாரடைப்புக்கு முன்னதாக, சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாச்சி, அதற்கு பின் வந்த நாட்களில், அஜித்தை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அந்த சந்திப்பு நிகழாமலேயே அவர் இந்த உலகை விட்டு சென்று விட்டார் என வருத்தத்துடன் கூறியுள்ளார் சாச்சியின் மனைவி சிஜி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!