
தெருவில் வாசித்தவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்குமார்
இந்த சமூக வலைத்தள உலகத்தில் பல திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. சில நாட்களுக்கு முன் ஒருவர், தெருவில் பூம் பூம் மாடு வைத்துக் கொண்டு நாதஸ்வரம் வாசித்து யாசகம் கேட்கும் வீடியோ ஒன்றை ஒருவர் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவை இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்குமார் ஷேர் செய்து “இவர் யார் எனத் தெரிந்தால் அவரை பதிவுக்கு பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலி, நோட்ஸ்களில் மிகவும் துல்லியம்,” எனப் பாராட்டியிருந்தார்.
அன்றைய தினமே அவர் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசியையும் ஒருவர் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாட்டுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ்குமார் பதிவிட்டுள்ளார்.
இப்படித்தான் 2019ம் வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய "கண்ணாண கண்ணே" பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த "சீறு" படத்தில் "செவ்வந்தியே..." என்ற பாடலைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் இமான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!