
பள்ளி காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் : கவுரி கிஷன்
அதில், தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவாகரத்தை கேள்விப்பட்டபோது, அடையாறில் நான் படித்த பள்ளியிலும் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தது ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. நான் மட்டுமல்ல, என்னுடைய பல தோழிகளுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறியும் கேட்டுள்ளேன். அங்கு படித்தபோது சில ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை சுட்டிக்காட்டி பேசுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது. அவர்களின் குணாதிசயங்கள் பற்றி கேவலமாக பேசுவது என செயல்பட்டுள்ளார்கள். மேலும், மாணவர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வீண்வழி சுமத்தியும் வந்தார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை நான் இங்கே கூற விரும்பவில்லை. அதேசமயம் பாதிப்புக்கு ஆளான மாணவிகள் உடனுக்குடன் இதுபற்றி வெளியே தெரியப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.. நமக்கு அடுத்த தலைமுறை மாணவர்களாவது நல்ல ஆரோக்கியாமான சூழலில் பயமில்லாமல் கல்வி கற்கும் சூழல் உருவாகும் என தான் படித்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கவுரி கிஷன்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!