
ஷங்கர் - ராம்சரண் படத்திற்காக காத்திருக்கும் ராஷ்மிகா
ஏப் 26, 2021
Advertisement
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!