
ரீமேக் படங்களில் நடிக்க மறுத்தேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்
படத்தில் நடிப்பது குறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆன்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம். அதனால் நான் நிறைய ரீமேக் படங்களில் நடிக்க மறுத்திருக்கிறேன். ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்தபோது கண்டிப்பாக செய்ய வேண்டும் என நினைத்தேன்.
இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்து இப்படத்தில் இருக்கிறது. க.பெ ரண்சிங்கம் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு சிறுமியை சந்தித்தேன். அவளுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. அதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த படமும் அதை பற்றித்தான் பேசுகிறது.
இன்றும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை. கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக இப்படம் பார்க்கப்பட வேண்டும். என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!