
காடன் படத்துக்காக உயிரை கொடுத்து உழைத்தேன்: சம்பத்ராம்
இதுகுறித்து சம்பத்ராம் கூறியதாவது: காடன் படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. 7 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் தான் எனக்கு அடிபட்டது. ஒரிஜினலாகவே என்னை ஸ்டண்ட் மேன் ஒருவர் தாக்க, நெஞ்சில் அதிகமாக வலி ஏற்பட்டு மயக்கமடைந்தேன். இருந்தாலும், வலியுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்தேன்.
பிறகு சென்னை வந்த போது தான், நெஞ்சில் இரத்தம் உறைந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்படி வலியோடு நடித்தாலும், என் கதாப்பாத்திரத்திற்கும், நடிப்புக்கும் கிடைக்கும் பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். பிரபு சாலமனின் இணை இயக்குநர் மணிபால் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். பெல்பாட்டம், தொல்லைக்காட்சி, நாரப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!