
லாபம் - ஸ்ருதிஹாசனைப் புறக்கணித்த இயக்குனர்
அப்படி அவர் வெளியேறும் போது படத்தின் இயக்குனரான ஜனநாதனிடம் கூட சொல்லாமல் வெளியேறியது இப்போது தெரிய வந்துள்ளது. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ஜனநாதன்.
படத்தின் படப்பிடிப்பு அப்போது நடந்த போது திடீரென ரசிகர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடன் விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது கொரானோ தொற்று குறையாத நேரம். பாதுகாப்பு அம்சங்களுடன்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை அப்படி சந்தித்துப் பேசியது பிடிக்காமல் ஸ்ருதிஹாசன் வெளியேறி இருக்கிறார். அப்படி போகும் போது அவர் இயக்குனரிடம் கூட சொல்லவில்லையாம்.
ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் ஸ்ருதிஹாசனை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறார் இயக்குனர்.
அடுத்து ஸ்ருதிஹாசன் டப்பிங் பேச வருவாரா இல்லையா என்பது சந்தேகம்தான். அவருக்குப் பதிலாக வேறு யாராவது டப்பிங் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்ருதிஹாசன் பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!