
தறியுடன் நாவல் படமானது: கதை நாயகி ரம்யா
இப்போது முதன் முறையாக சங்கத்தலைவன் என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இது தறியுடன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவனாக சமுத்திரகனியும், அவரது மனைவியாக ரம்யாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, பாலாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார், ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நெசவாளர்களின் வாழ்வியில் கதை. தங்களின் வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு புரட்சிக்காரனின் கதை. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. நாவலில் சொல்லப்பட்ட இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டு உண்மைக்கு மிக நெருக்கமாக படம் உருவாகி உள்ளது. என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!