
முதல்வர் வெளியிட்ட எம் ஜி ஆர் பாடல்
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்..,
நாற்காலி படமானது அமைதிபடை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம். இந்த படத்தில் நான் எம்.ஜி.ஆரின்.ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படம் முழுக்க அரசியல் நையாண்டியுடன் கூடிய படம். ஆனால் யாரையும் காயபடுத்தாத அளவிற்கு இருக்கும். எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தார்.
எம்.ஜி.ஆர். என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும். சட்டமன்ற தேர்தலுக்காக இந்த படம் எடுக்கபடவில்லை . அமைதி படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைபடம் வரவில்லை.
தமிழக அரசியலிலும்,சினிமாவிலும் எம்.ஜி.ஆரை தவிர்த்து பேச முடியாது. அதனால் தான் இன்றைய நிலையிலும், அவர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர் தான் எனத் தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!