
மாஸ்டரைச் சந்தித்த மாணவன், காளிதாஸ் நெகிழ்ச்சி
அவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் சில வருடங்களுக்கு முன்பே ஒரு பக்கக் கதை படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் பட வெளியீடு மிகவும் தாமதமாகி கடந்த மாதம்தான் ஓடிடியில் வெளியானது.
ஆனால், மலையாளத்தில் சில படங்களில் நாயகனாக நடித்து முடித்துவிட்டார் காளிதாஸ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காளிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை சமீபத்தில் சந்தித்த அனுபவத்தை டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். “நீங்கள் நினைத்த சில விஷயங்கள் சிறப்பாக நடக்கும் போது... மாஸ்டரைச் சந்தித்த மாணவன். விஜய் சார், உங்கள் நேரத்திற்கும், முயற்சிகளுக்கும் நன்றி, நிறைய அர்த்தத்துடன்...” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார் காளிதாஸ்.
இன்றைய டிரென்டிங்கில் காளிதாஸ் நிச்சயம் வந்துவிடுவார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!