
நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி
முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் அந்த டிரைலரில் காண்பிக்கப்படுகிறது. முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
காட்டான் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்” என்கிறார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகும் இதை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார் தனது தயாரிப்பாளர் அனுபவம் குறித்து பேசியுள்ள விஜய்சேதுபதி, ""இதற்கு முன்பு நான் தயாரித்த படங்கள் எனக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின. சங்குதேவன் படத்தால் எனக்கு 1.75 கோடி நஷ்டம், ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சி , ஜூங்கா படங்களும் எனக்கு நஷ்டமாகவே முடிந்தன. இருப்பினும் இந்த படங்கள் எனக்கு பிடித்தமானவை என்பதால் எந்த வருத்தமும் ஏற்படவில்லை. காட்டான் வெப்சீரிஸை தயாரிக்க ஹாட் ஸ்டார் நிறுவனம் நிதி வழங்கியுள்ளது"" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!