
அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம்
இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே குஷ்புவின் சோசியல் மீடியாவில் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் சுந்தர். சியின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும், கமலும் உங்கள் கணவரை தாங்கள் தயாரிக்கும் படத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக கேள்விப்பட்டோம். அப்படியானால் இந்திய திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர்.சியை குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரமா? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, தனது எக்ஸ் பக்கத்தில், என் செருப்பு சைஸ் 41. அடி வாங்க தயாரா? என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!