
டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன் கூறும்போது, “சவுந்தர்யாவுடன் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். அவர் ரொம்பவே அப்பாவி பெண்ணாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு இளம் தேவதையாக உருவாக்கிக் கொள்ளும் வரை அவரது வளர்ச்சியை நேரில் இருந்து பார்த்தவள் நான். தன்னுடைய புகழ் எப்போதுமே தன்னை மாற்றிக் கொள்ள அவர் அனுமதித்ததே இல்லை. அவர் உண்மையிலேயே ஒரு நல்ல தோழி. அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதநேயம் கொண்டவர்” என்று தெரிவித்தார்.
90களில் ஆரம்பத்தில் சினிமாவை நுழைந்து தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர் சவுந்தர்யா. தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவரும் ரம்யா கிருஷ்ணனும் அம்மன், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2004ல் ஒரு விமான விபத்தில் நடிகை சவுந்தர்யா இறந்தார். இந்த நிலையில் தான் சவுந்தர்யாவின் வீடியோ காட்சியை பார்த்ததும் கண்கலங்கி விட்டார் ரம்யா கிருஷ்ணன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!