
ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல்
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பாரில் மது அருந்தும்போது லட்சுமி மேனனின் நண்பர்களுக்கும், இன்னொரு கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. தப்பிச் சென்ற அந்த கும்பலை லட்சுமி மேனனின் நண்பர்கள் விரட்டி சென்று, காரை வழிமறித்து அதிலிருந்த ஐடி ஊழியரை கடத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கும்பலில் நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மனுவை ஏற்று கோர்ட் வழக்கை ரத்து செய்யாவிட்டால் லட்சுமி மேனனுக்கு சிறை தண்டனை உறுதி என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!