
இளையராஜா பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம்
ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இடையில் படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்பின் எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழுவினர் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் இளையராஜாவுக்கு தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவின் பயோபிக்கை சீக்கிரம் எடுத்து முடிங்கள். நான் வேண்டுமானாலும் திரைக்கதை எழுதித் தருகிறேன் என்று பேசினார். இதற்கு முன்பு கமல்ஹாசன் கூட அப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் இருந்ததாகத் தகவல் வெளியானது.
ரஜினி பேசிய பிறகாவது இளையராஜா பயோபிக் குறித்த அடுத்த கட்ட செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!