
தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெலுங்கு திரையுலகை விட்டு தான் ஒதுங்குவதற்கு காரணம் தான் கடைசியாக நடித்த கோவிந்துடு அந்தரிவாடலே படம் தான் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார் கமாலினி முகர்ஜி.
இதுகுறித்து அவர் கூறும்போது “அந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் நல்லபடியாக தான் நடந்தது. ஆனால் படம் வெளியான போது படத்தில் என் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படத்திற்கு என்னுடைய கதாபாத்திரம் தேவையில்லை என நினைத்திருந்தால் எடிட்டிங் டேபிளிலேயே அதை நீக்கி இருக்கலாம். எதற்காக இந்த படத்தில் நடித்தோம் என்கிற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டது அந்த படம். ஆனால் இதற்கு அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் படக்குழுவோ காரணம் இல்லை. அதனால்தான் அதற்கு அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!