
தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி
இது குறித்து அவர் கூறும்போது, “துரோகால் படத்திற்கு எனக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் இயக்குனர் கோவிந்த் நிகாலனி என்னை அழைத்து ஒரு மிகப்பெரிய ஹோட்டலின் பெயரை சொல்லி அங்கே திரை உலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்க ஏற்பாடு செய் என்று கூறினார். அந்த ஹோட்டலை அதுவரை நான் வெளியிலிருந்து தான் பார்த்திருக்கிறேனே தவிர உள்ளே சென்றதும் இல்லை. அங்கே சாப்பிட்டதும் இல்லை.
ஒரு வழியாக அங்கே பார்ட்டிக்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன். ஆனால் பார்ட்டியில் எங்கே செலவாகி விடுமோ என்று ஒரு கிளாஸ் ஓட்கா குடிப்பதற்கு கூட தயங்கிக் கொண்டு ஒரு கிளாஸ் லெமன் கலந்த தண்ணீரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நின்றேன். காரணம் இந்த பார்ட்டி முடிந்ததும் கட்ட வேண்டிய பில் தொகைக்கான பணம் என்னிடம் இல்லை. அந்த டென்ஷன் வேறு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் இயக்குனர் கோவிந்த் நிகலானியை தனியே அழைத்து, சார் ஒருவேளை இந்த பார்ட்டிக்கான பணத்தை என்னால் கட்ட முடியாமல் போனால் என்ன நடக்கும் ? இங்கே ஹோட்டலில் உள்ள பாத்திரங்களை கழுவ சொல்வார்களா ? இல்லை போலீஸ் வருமா என்று கேட்டேன். என் நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், இந்த பார்ட்டிக்காக செலவை தானே செலுத்தி விடுவதாக கூறியதும் தான் அதுவரை என்னிடம் இருந்த டென்ஷன் மறைந்தது. நானும் மற்றவர்களுடன் அந்த பார்ட்டியில் ஜாலியாக பங்கேற்றேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!