
எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு
அந்த வகையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறும்போது, “ஆடுஜீவிதம் படம் எப்படிப்பட்ட படம் அதில் நடிகர் பிரித்விராஜின் நடிப்பு, இயக்குனர் பிளஸ்சியின் உழைப்பு எப்படிப்பட்டது. அதை விருது குழுவினர் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லையே. காரணம் வேறு ஒன்றும் இல்லை எம்புரான் படம் தான்” என்று கூறியுள்ளார்.
எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த சில நிமிட காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பின்னர் அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பின்னரே படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்கியது நடிகர் பிரித்விராஜ் தான், அதனால் அதே பிரித்விராஜ் நடித்த ஆடுஜிவிதம் படத்தை திட்டமிட்டு விருது குழுவினர் புறக்கணித்துள்ளனர் என்றும், இதில் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பதும் தான் ஊர்வசி சொல்ல வந்த கருத்து என்பது தெளிவாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!