
கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை
இந்த காஞ்சிபுரம் சேலையை செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நான்கு நெசவாளர்கள் கிட்டத்தட்ட 400 மணிநேரம் வேலை செய்து கை வேலைப்பாட்டில் உருவாக்கினார்களாம். இதற்காக 1950களில் செட்டிநாடு வீட்டு திருமணத்தில் மணப்பெண்ணுக்கு உருவாக்கப்படும் திருமண பட்டுச் சேலையின் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த திஷா மதன் 2020ல் வெளியான பிரெஞ்ச் பிரியாணி என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். அவ்வளவுதான் இவருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள எப்படி வாய்ப்பு கிடைத்தது என கன்னட திரையுலகை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!