
சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி
இதுதொடர்பாக டூரிஸ்ட் பேமிலி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், ‛‛இந்தப்பட வெற்றியால் என் சம்பளத்தை உயர்த்த போகிறீர்களா என பலரும் கேட்கிறார்கள். நிச்சயம் உயர்த்த மாட்டேன். காரணம் நான் நிறைய தோல்வியை சந்தித்துள்ளேன். இந்த படம் முதல்நாளிலேயே 2 கோடி அல்லது 2.5 கோடி வசூலித்திருக்கலாம். ஆனால் என் ஒரு படம் மொத்தமே ரூ.2 கோடி தான் வசூலித்தது. ஒரு நடிகரின் படம் எவ்வளவு வசூலிக்கிறது என்று வெளிப்படையாக சொன்னால் தான் அவர்கள் சம்பளம் பற்றி சிந்திப்பார்கள். எனது சுந்தரபாண்டியன், குட்டிபுலி ஆகியவை தான் அதிகம் வசூலித்த படங்கள். அதை டூரிஸ்ட் பேமிலி முறியடித்துள்ளது"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!